தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) நடைபெற்று முடிந்த குரூப் 1 தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டு சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை என மொத்தம் 139 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்குக் கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து குரூப் 1க்கான முதன்மைத் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்றோர் தங்களது முடிவுகளை http://tnpsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜூலை 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் குரூப் 1 மெயின் தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஏப்ரல் 10 முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.