சிறை அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறைத் துறையில் உதவி சிறை அலுவலர் பணியிடங்களில் 30 இடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சிபெற்ற 80 பேர், வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதேப் போன்று, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணியிடங்களில் 105 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வரும் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












