தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், உள்ளிட்ட 1178 காலிப் பணியிடங்களை நிரப்ப வரும் நவம்பர் 24, 26, 27 ஆகிய தேதிகளில் இணையவழித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
வனத்துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்குக் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 15ம் தேதி முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வனவர் பணியிடத்திற்கு நவம்பர் 24ம் தேதியன்றும், வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் இணையதளம் மூலம் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.