அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.பார்ம், பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்கியது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்ளிட்டு 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு. அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் பரிசீலனை செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 10ம் தேதியன்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் 500க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 12, 13, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.