தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தற்போது வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு தேதி விவரங்களைச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதனிலைத் கணினி வழித் தேர்வு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
விண்ணப்பப்பதிவு முடிவடைந்த பிறகு, அதில் ஏதேனும் பிழை இருந்தால், அதனைப் பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் திருத்திக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், கணினி வழி தேர்விற்கான ஹால்டிக்கெட்டுக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












