தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 10, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், 10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் வரும் 29 மற்றும் 19 தேதிகளில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை இதனை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதேப்போல மற்ற வகுப்புகளுக்கு நடைபெற்ற ஆண்டு இறுதித் தேர்வுகளின் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க முடியாமல் மாணவர்கள் தோல்வியுற்றால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், ஜூன் 3 முதல் 10ம் தேதி வரையில் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.