10-ம் வகுப்பு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!

2020 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க தனித் தேர்வர்களிடம் இருந்து ஜனவரி 6ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கத் தனித் தேர்வர்களிடம் இருந்து ஜனவரி 6ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதுகுறித்து அரசுத்தோ்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தோ்வா்கள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரையில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மாா்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம்.

நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப் பாடமாகக் கண்டிப்பாகத் தேர்வெழுதுதல் வேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வர்களின் நலன் கருதி தேர்வு நேர கால அளவானது இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் குறித்த மேலும் தகவல்களை இணையதளத்தில் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 10th: Applications from 10th class Individuals are welcome!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X