திரிபுரா இடைநிலைக் கல்வி வாரியம் (TBSE) இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tripuraresults.nic.in, tripurainfo.com எனும் இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு, திரிபுரா பேள்ளி தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவிருந்த தேர்வில் 80.62 சதவீத தேர்ச்சி பதிவு செய்துள்ளது. எட்டு மாவட்டங்களில் 1066 பள்ளிகளில் இருந்து இந்த ஆண்டு தேர்வுகளுக்கு மொத்தம் 39,987 விண்ணப்பதாரர்கள் தங்களை வழக்கமான முறையில் பதிவு செய்துள்ளனர்.
TBSE வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 426 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மற்றும் திரிபுராவின் தெற்கு பகுதியில் உள்ள கோமதி மாவட்டம் உள்ளிட்டு 8 மாவட்டங்களில் வாரியத்தின் தற்காலிக தர நிர்ணயத்தின்படி அதிக தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு முடிவு தனித்துவமானது, ஏனெனில் தேர்வுகள் நடத்தப்படாமல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












