தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தோ்வு தமிழில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள கணக்கீட்டாளா் மற்றும் இளநிலை உதவியாளர் (கணக்கு) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்குக் கணினி அடிப்படையிலான ஆங்கில மொழியில் தேர்வு நடைபெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் நலன் கருதி, இத்தோ்வை தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும் என முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க, மாா்ச் 23-ஆம் தேதி வரை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












