தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12?ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கால அட்டவணையினை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பத்தாம் வகுப்பிற்கான அரையாண்டுத் தேர்வு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையில் நடைபெறும். அதேபோன்று 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான அரையாண்டுத் தோ்வு டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரையில் நடைபெறும்.
பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பின் படி பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும், 11ம் வகுப்பிற்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.
தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தோ்வு எண் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்துள்ள மூன்று மணி நேரம், வினாக்களுக்கு விடையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரையாண்டுத் தேர்விற்கான கால அட்டவணையை அனைத்து வகைப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.