தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி வாரியம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ , குரூப் 4, விஏஓ, அறநிலைத்துறை தேர்வுகளுக்கு முக்கிய தேவையான பகுதியாக இருப்பது மொழி அறிவாகும் அவற்றில் அதிகமானோர் தேர்ந்தெடுப்பது பொதுதமிழ் ஆகும். போட்டி தேர்வில் வெற்றி பெற முக்கிய பங்கு வகிப்பது பொது தமிழ் ஆகும் .
பொது தமிழ் கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடபுத்தகங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன . பொது தமிழ் கேள்விகள் அனைத்தையும் எழுதி முழுமதிபெண்கள் பெற பாடபுத்தகங்களை நன்றாக படிக்க வேண்டும் . 90 சதவீகிதம் கேள்விகளுக்கு எளிதில் விடையளிக்கலாம் 10 சதவீகித கேள்விகளில் விழிப்புணர்வுடன் விடையளிக்க வேண்டும் .
1 செய்யுளில் ஓசை குறையாத போது செவிக்கு இனிய இசை தரும்பொருட்டு உயிர் குறில் உயிர் நெடிலாக அளபெடுத்தல் யாவை
விடை: இன்னிசை அளபெடை
2 கு, சு, டு, து, பு, று யாவை
விடை: ஆறு வல்லின உகர எழுத்துக்கள்
3 திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
விடை: ஜி.யூ.போப்
4 கல்வியைவிட ஒழுக்கமே சிறந்தது என கூறும் நூல்
விடை: முதுமொழிக்காஞ்சி
5 அறிவுரைகோவை என அழைக்கப்படுவது யாது
விடை: முதுமொழி காஞ்சி
6 சமண காப்பியங்கள் யாவை
விடை: சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
7 தமிழில் தோன்றிய முதல் உலா யாது
விடை: திருக்கயிலாய ஞானஉலா
8 பிள்ளைத்தமிழ் எந்த சந்தத்தால் ஆனவை
விடை: கழிநெடிலாசிரியச் சந்தவிருத்தத்தால்
9 மகாவித்துவான் மீனாட்சிசுந்திரம்பிள்ளை பாடிய பிள்ளைத்தமிழ் நூல்கள்
விடை: சேக்கிழார் பிள்ளைத்தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
10 இரட்டையர் பாடிய கலம்பக நூல்கள் யாவை
விடை: திருவாமாத்தூர்க் கலம்பகம் , தில்லைக் கலம்பகம்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத படிக்கிறிங்களா அப்போ நடப்பு நிகழ்வுகள் படிங்க,,!!