2019-2020-ஆம் கல்வி ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்விற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு:-
பத்தாம் வகுப்புக்கு 2020 மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் மொழி பாடங்களும், அதன்பிறகு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகளும் நடைபெறுகிறது.

பதினொன்றாம் வகுப்பு:-
11ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு:-
இதே போல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 2, 5 ஆகிய தேதிகளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வும், அதனைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. இது குறித்த முழுமையான விபரங்களை அரசுத்தேர்வுககள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முழு விபரங்களுக்க இங்கே கிளிக் செய்யவும்: https://drive.google.com/file/d/1cB8wI73qDUsUOonPM8GaHbb8U2aMawIA/view


Click it and Unblock the Notifications












