தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்று மடிந்த 11ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வினாத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, 11ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் கடந்த வியாழக்கிழமை dge.tn.nic.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைத்தாளின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இதே இணையதளத்தில் உள்ள Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்தைத் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதியன்று (இன்று) காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த மறுகூட்டலில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205, மறுமதிப்பீட்டுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.