10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான புதிய அட்டவணையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
2019-2020-ஆம் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மொழிப்பாடங்களில் தலா இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறையை ஒரே தாளாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
அதாவது, மொழித்தாள் 1, மொழித்தாள் 2, ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என இருந்த பாடங்கள் தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டே தாள்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, 2020-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி முதல் தேர்வு தொடங்கப்பட உள்ளது. 27, 28-ம் தேதி மொழிப்பாடமும், 31-ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்குமான பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 3-ம் தேதி சமூக அறிவியலும், 7-ம் தேதி அறிவியல், 13-ம் தேதி கணிதத்துக்கான பொதுத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- மார்ச் 27 மற்றும் 31-ம் தேதிகளில் மொழிப்பாடம்
- மார்ச் 28 விருப்ப மொழிப் பாடம்
- ஏப்ரல் 3 - சமூக அறிவியல்
- ஏப்ரல் 7 - அறிவியல்
- ஏப்ரல் 13 - கணிதம்