கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது.
அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன்படி தற்போது, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு வரும் 14ம் தேதியன்று மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் தேர்வுகளுக்கான முடிவுகளை அக்டோபர் 16-ம் தேதியன்று தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.