ரயில்வேத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு), டிஎம்ஸ் மற்றும் டிஎம்ஏ உள்ளிட்ட பணியிடங்களுக்கா அறிவிப்பை ஆர்ஆர்பி தேர்வு வாரியம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இளநிலை பொறியாளர் பணிக்கான முதல்கட்ட கணினித் தேர்வு மே 22 முதல் ஜூன் 2 வரை நடைபெற்றது.
தற்போது, அதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் rrbcdg.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு முடிவுகளைக் காணலாம்.
கட்-ஆப் மதிப்பெண்கள்
முதற்கட்ட கணினித் தேர்வுக்கான உத்தேசமான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் பின்வருமாறு
பொதுப்பிரிவு - 60 முதல் 70 மதிப்பெண்கள்
ஓபிசி பிரிவு - 55 முதல் 65 மதிப்பெண்கள்
எஸ்.சி., பிரிவு - 45 முதல் 55 மதிப்பெண்கள்
எஸ்.டி., பிரிவு - 40 முதல் 50 மதிப்பெண்கள்
வேலை வாய்ப்பு அதிகரிப்பு
இத்தேர்வு குறித்தான அறிவிப்பு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, இதில் மொத்தம் 13487 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த வேலை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இதனிடையே, சென்னை, மும்பை, செகந்திராபாத் ஆகிய இடங்களில் மொத்தம் 23 வேலை வாய்ப்புகளை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா ரயில்வேயில் 74 காலிப் பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதனால், மொத்தம் 13,538 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.