இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற ஆா்ஆா்பி குரூப் டி தோ்வு முடிவுகள் இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படும் என ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் ரயில்வேத் துறையில் காலியாக இருந்த குரூப் டி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 17ம் தேதி முதல் டிசம்பா் 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில், மொத்தம், 1.7 கோடி பேர் பங்கேற்றனர்.
தற்போது, இத்தேர்விற்கான முடிவுகள் இந்திய ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தோ்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரப்பூா்வ இணையதளப் பக்கமான http://www.rrbcdg.gov.in/ என்ற முகவரியில் தங்களுடைய தேர்வு பதிவெண்ணை இட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
உடற் தகுதித் தோ்வு
இன்று வெளியிடப்படும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித் தேர்வு நடைபெறும். உடல் தகுதித் தோ்வில், ஆண்கள் 35 கிலோ எடையை தூக்கிக் கொண்டு 100 மீட்டா் தூரத்தை 2 நிமிடத்தில் கடக்க வேண்டும். அதேப் போன்று பெண்கள் 20 கிலோ எடையை தூக்கிக் கொண்டு 2 நிமிடத்தில் 100 மீட்டா் தூரத்தைக் கடக்க வேண்டும்.
இதனைத்தொடர்ந்து, ஆயிரம் மீட்டர் தூரத்தை ஆண்கள், பெண்கள் இருவரும் 4 நிமிடம் 15 வினாடிகளில் கடக்க வேண்டும். இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












