இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரிவு வாரியாக நடைபெறும் இத்தேர்வுகளுக்கு ஏற்ப தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அக்டோபர் 12ம் தேதிக்கான தேர்வு அனுமதிச்சீட்டு ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianrailways.gov.in என்னும் லிங்க்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரரின் பதிவெண் இடுவதின் மூலம் அவர்களுக்கான அனுமதிச் சீட்டு வெளிப்படும். சுமார் 1.9 கோடி விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் முறையாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்விற்கு வரும்பொழுது இந்த அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து, அவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாளச் சான்றினை கொண்டுவர வேண்டும்.