ரயில்வே பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடைபெற்ற குரூப் சி மற்றும் டி கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை என்ற மற்றொரு பிரிவும் இதனுடன் இணைந்து செயல்படுகிறது. தற்போது இந்த இரு பிரிவுகளிலும் உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட கணினி வழியான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் http://constable.rpfonlinereg.org/ அல்லது indianrailways.gov.in என்னும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்ட தேர்வான உடற் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள், உடற்திறன் தேர்வுக்கு தகுதி பெறுவர். இத்தேர்வுகள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆர்பிஎப் இணையதளத்தில் வெளியிடப்படும்.