மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவச் செல்வங்கள் இந்த கல்விக் கடனைப் பெற்று பயன் அடையலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற www.nhfdc.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகவும் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள மாற்றுத் திறனாளி நபர்களுக்கு இந்த தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.
கல்விக் கடனுக்கு ஆண்டுக்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
இதுதொடர்பான விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும். எனவே மாற்றுத் திறனாளி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்விக் கடனைப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












