சென்னையில் மழைகாரணமா முன்அரையாண்டு தேர்வு தள்ளிப்போடப்பட்டுள்ளது. சென்னையில் மழைகாரணமாக முன் அரையாண்டு தேர்வுகள் இரத்து செய்வது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டப் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மழைபெய்து வருவதால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பாடங்கள் முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆகையால் ஆசிரியர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க சென்னையில் அரையாண்டு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 11, 12 ஆம் வகுப்பு மாணவரகளுக்கான அரையாண்டு தேர்வு மாவட்ட முதண்மை கல்வி குழு மூலம் தேர்வு நடைபெறுகிறது.
தொடர் மழை காரணமாக நவம்பர் 3ஆம் நாள் நடக்கவிருந்த தேர்வானது நவம்பர் 25 ஆம் நாள் அண்ணா பல்கலைகழகம் தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஓவியப்போட்டி :
மழைக்காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருக்கின்றனர். மத்திய அரசு அறிவித்துள்ளது . இப்போட்டியில் 6, 7,8ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். "நம் எதிர்கால தலைமுறையினரை காக்க அதிக கவனத்துடன் தண்ணீரை பயன்படுத்தவும்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. மாணவர்கள் இப்போட்டிக்கு வீட்டில் இருந்து தயார்ப்படுத்தி கொள்ளவும் . மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் தேர்வில் மாணவர்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-24914334, 9600152202 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
பள்ளிகளில் கலைவிழாவில் சினிமா பாடலுக்குத்தடை
பள்ளிகளில் வட்டம் மாவட்டம் வாரியாக நடத்தப்படும் கலைவிழா போட்டியில் சினமா பாடல்கள் இடம்பெற பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியான இசைக்குழுகளும் அழைக்க கூடாது.
பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பேச்சு, எழுத்து , நடனம், ஒவியம், கையெழுத்து தொடர்பான போட்டிகள் நடைபெறுகிறது.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












