நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இந்திய விஞ்ஞான் ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர் அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர்
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ ஜேஆர்எஃப் மற்றும் செலச்சர்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது .
தேசியதகுதி தேர்வு எனப்படும் நெட் தேர்வு எழுதி வெற்றி பெறுவோர் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம் . நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர்களுக்கு இதர கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் . அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் விரிவுரையாளர் பணியிடங்கள் பெருவதற்கு சிறப்பு தகுதியை பெற வைக்கும் .
ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் நெட்தேர்வுக்கு விண்ண்ப்பிபோர்கள் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரிக்கும் . இவ்வாண்டுக்கான இரண்டாம் முறையாக நெட் தேர்வு சிஎஸ்ஐஆர் அறிவித்துள்ளது. எம்எஸ்சி, எம்எஸ் மருத்துவ படிப்புகள் மற்றும் அதனுடன் பிஇ , பிடெக், பி பார்மா படித்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதிப்படைத்தோர் அவர்கள் மேலும் 55% மதிபெண் பெற்றிருக்க வேண்டும் . எஸ்எடி பிரிவினர் 50% விகித மதிபெண் பெற்றிருந்தால் போதுமானது ஆகும் .
ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான தேர்வு எழுத விரும்புவோர் 50 % சதவிகித மதிபெண் பெற்றிருந்தால் போதுமானது ஆகும் . 1.7.2017 தேதியில் 28 வயதுக்கு உட்ப்பட்டவராக இருக்க வேண்டும் . அரசு விதிகளின்படி வயது வர்ம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது . அதே போன்று விரிவுரையாளர்களுக்கான நெட் தேர்வு எழுதுவோர்க்கு உச்சவயது வரம்பு தடையில்லை .
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினர் ரூபாய் 1000 மற்றும் ஒபிசி பிரிவினர் விண்ணப்பிக்க ரூபாய் 500 விண்ணப்பிக்க வேண்டும் . எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள் ரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் . விருப்பமுள்ளோர் ஆன்லைன் விண்ணப்பத்தை செபடம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிப்போர் தங்களின் ஹார்டு காப்பி செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு பார்த்துகொள்ள வேண்டும் .இதுப்பற்றி அறிந்துகொள்ள அதிகார பூர்வ இணையதளத்தை http://csirhrdg.res.in/ பார்த்து அறியலாம்
சார்ந்த பதிவுகள்:
நெட் தேர்வு எழுதுவோர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக அறிவிக்க வேண்டும்