கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நடைபெற்று முடிந்த நீட் தேர்விற்கான முடிவுகள் அக்டோபர் 16ம் தேதியன்று வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் நீட் போன்ற தேர்வுகளை நடத்த வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்விற்கான பணிகளைத் தொடர்ந்து மத்திய அரசு முன்னெடுத்து வந்தது. அதோடு, ஆங்காங்கே நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நீட் தேர்வு 2020 நடைபெற்று முடிந்தது. அதற்கான தேர்வு முடிவுகளை அக்டோபர் 16ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ntaneet.nic.in என்ற இணைய முகவரியில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.