சென்னை: டிஸ்-நெட் 2016 தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்தத் தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை, துல்ஜாப்பூர், ஹைதராபாத், கௌஹாத்தி, சென்னை, கோழிக்கோடு, ராஞ்சி நகரங்களில் டிஸ் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில இந்தத் தேர்வு உதவுகிறது. இதற்காக ஜனவரி 9-ம் தேதி டிஸ்-நெட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி, முறைகேடு நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் தொழில்நுட்பத் தவறுகளும் இந்தத் தேர்வில் நடந்துள்ளது.
தேர்வின்போது செல்போன்கள், கால்குலேட்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தேர்வு முறை மாற்றப்பட்டது குறித்து குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டதாம்.
இதைத் தொடர்ந்து இந்தத் தேர்வை மறுபடியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகவுள்ளது.