எல்ஐசி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்கள் இத்தொகுப்பில் காணலாம்.
மத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.licindia.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு www.licindia.in என்னும் எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக இந்த அறிவிப்பினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான ஹால்டிக்கெட் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் இதனை www.licindia.in என்ற இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.