பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டு சேர்க்கைக்கு, இரண்டு கட்டமாக தேர்வு நடக்கிறது. முதல் கட்ட தேர்வானது, ஜூனில் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின.

இந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவோரில், ஐ.ஐ.டி.,யில் மட்டும் சேர விரும்புவோர், ஆக., 28ல் நடக்கும் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
English summary
The JEE, Phase II main exam for studying engineering in IITs will be held today (July 25) in 500 cities. All the best students…!
Story first published: Monday, July 25, 2022, 11:22 [IST]


Click it and Unblock the Notifications












