சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜேஇஇ மெயின் தேர்விற்கான முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் நாளை (ஏப்ரல் 30) வெளியாக உள்ளது.

ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள பொது நுழைவுத் தேர்வான ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதனை என்டிஏ எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
ஜேஇஇ மெயின் 1 மற்றும் ஜேஇஇ மெயின் 2 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த இரு தேர்வுகளை எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த ஆண்டு ஜனவரில் நடைபெற்ற ஜேஇஇ மெயின் 1 தேர்வில் 6.69 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 75 சதவிகிதம் பேர் ஜேஇஇ மெயின் 2 தேர்வையும் எழுத விண்ணப்பித்தனர். ஜேஇஇ மெயின் 2 தேர்வு ஏப்ரல் 7 முதல் 12 வரையில் நடைபெற்றது.
இத்தேர்விற்கான முடிவுகள் நாளை (ஏப்ரல் 30) வெளியாக உள்ளது. மாணவர்கள் இதனை jeemain.nic.in. என்ற ஜேஇஇ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












