கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கு கடந்த 15-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே மேலும் சில காரணங்களால் இந்தத் தேர்வு வரும் 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேப் போல கடந்த 16ம் தேதியன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதியன்று நடைபெறவிருந்த தேர்வுகள் வரும் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவையும் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிற தேர்வுகள் அனைத்தும் நடைபெறுவதாக இருந்த நாட்களிலேயே நடைபெறும். அதாவது, 19ம் தேதியன்று நடைபெறவிருந்த தேர்வு 26ம் தேதியன்றும், 20ம் தேதியன்று நடைபெறவிருந்த தேர்வு 28ம் தேதியன்றும் நடைபெறும்.