தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 392 பேர் மட்டுமே விண்ணப்பம்

தமிழகத்தில் காலியாக உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மொத்தம் 1,850 இடங்கள் உள்ள நிலையில் வெறும் 392 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

By Saba

தமிழகத்தில் காலியாக உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மொத்தம் 1,850 இடங்கள் உள்ள நிலையில் வெறும் 392 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 392 பேர் மட்டுமே விண்ணப்பம்

2019-20ஆம் ஆண்டின் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள், ஜூன் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இந்தப் படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பு பயின்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவிகித விழுக்காடும், மற்ற பிரிவினருக்கு 45 விழுக்காடும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1,070 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் நிர்ணயிக்கப்பட்டன.

இதனிடையே, இந்த பயிற்சி இடங்களில் சேர்வதற்குக் கடந்த 24-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 392 மாணவர்கள் மட்டுமே தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Elementary Teacher Course: Only 392 students applied
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X