போட்டி தேர்வுக்கு படிக்கும் நாம் அனைவரும் தேர்வுக்கு படிக்க சரியாக முயற்சிக்க வேண்டும் . ஒருவர் எந்த அளவிற்கு முயற்சிக்கின்றாரோ அந்த அளவிற்கு அவர் படித்த பாடங்களை சரியாக படித்திருக்கின்றாரா என்பதை பரிசோதிக்க வேண்டும் .
போட்டி தேர்வுக்கு கடின உழைப்போடு படித்தால் மட்டும் போதாது அவற்றை எந்த அளவிற்கு தேர்வுக்கு உபயோகமாக்க போகிறிர்கள் என்பதுதான என் கேள்வியாகும் . போட்டி தேர்வு என்பது இலக்கு இலக்கில் அதனை எவ்வாறு வெற்றி பெறுகிறோம் என்பது மிக முக்கியம் ஆகும் .
இலட்ச கணக்கானோர் பங்கேற்கும் தேர்வில் முதல் ஆயிரத்தில் நுழைய வேண்டும் அத்துடன ஒதுக்கீடு எண்ணிக்கையில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு தீவிரமாக முன் நடந்த தேர்வுகளின் கட் ஆஃப்களையும் தற்பொழுது நடக்கவிருக்கும் கட் ஆஃப் தேர்வையும் நன்றாக அறிந்து கொள்ளுங்கள் அதிலிருந்து இப்போது 5 அல்லது 10 கட் ஆஃப் மதிபெண் மாறுபட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் கட் ஆஃப் எந்த அளவிற்கு அதிகரித்தாலும் இல்லையென்றாலும் கட் ஆஃபை நெருங்கும் கேள்விகளுக்கு கட்டம் கட்டுங்கள் அதனை நோக்கி ஓடுங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் !!,,,
1 டெல்லியில் 2012 நிர்பயா கொலை வழக்கை தொடர்ந்து புதுடெல்லியின் பெண்கள் பாதுகாப்பிற்கு அரசு உருவாக்கிய செயலியின் பெயர் என்ன
விடை: ஹிம்மத்
2 உலகின் பெரும்பாலான நாடுகள் தனது புவியிடங்காட்டி சேவைக்கு அமெரிக்கவின் ஜிபிஎஸ் சேவையையே நம்பியிருந்தது ஆனால் இந்தியா தொடர்ந்து சொந்தமாக புவியிடங்காட்டி ஜிபிஎஸ் சேவை சொந்தமாக எப்பொழுது ஏவியது
விடை: 2013 ஜூலை 1 ல் முதன் செயற்கைகோள் ஏவப்பட்டது அதனை தொடர்ந்து படிப்படியாக ஏப்ரல் 28 , 2016 வரை 7 செயற்கோலை ஏவியது
3 இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்கப்பட்ட 7 செயற்கோள்களை உள்ளடக்கிய constellation of satellite எனப்படும் செயற்க்கைகோள் குழுமத்தின் பெயர்
விடை: நாவிக்
4 இந்தியாவின் முதல் தனிநபர் விரைவு போக்குவரத்து அமைப்பினை அங்கிகரிக்கப்பட்ட இடம் எது
விடை: குருகிராம் ஹரியானா
5 இந்தியாவின் முதலாவது கடல்சார் மாநாடு எப்பொழு தொடங்கப்பட்டது
விடை: ஏப்ரல்14, 15 2016
6 இந்தியாவின் முதலாவது கடல்சார் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆவணம்
விடை: சாகர் மாலா முன்னோட்டத்திட்டம்
7 இந்தியாவில் 3 வது ஆசியபுலிகள் மாநாடு நடைபெற்றது எப்போது
விடை: ஏபரல் 12- 14 , 2016 ஆகும்
8 மண்டேலா கிரக்கா மேச்சல் கௌரவ விருதை வென்றவர்
விடை: தபசம் அதானான்
9 2016 ஆம் ஆண்டு ஹிருதயனாத் மங்கேஸ்கர் விருது வென்ற இந்தியர் யார்
விடை: விஸ்வநாத் ஆனந்த்
10 இந்திய இராணுவத்தால் சூரத்கர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் பயிற்சி
விடை: சக்ரவியூக் II
சார்ந்த பதிவுகள் :
நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வில் வெற்றி கொள்ள படியுங்கள் !,,
போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை தினமும் படியுங்க
டிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு