மத்திய ஆசிரியா் தகுதித் தோ்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 25ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிற்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்தியப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் டிசம்பர் 8-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 18 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டு வந்தன.
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது செப்டம்பர் 25ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணத்தை 30-ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.