மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடிஇடி) விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் (நவம்பர் 22) தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிடிஇடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடிஇடி என்னும் தகுதித் தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்துகிறது.
2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9ம் தேதியன்று நடைபெற உள்ளது. மொத்தம் 92 நகரங்களில் உள்ள 2,296 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு அறை நுழைவுச் சீட்டு www.ctet.nic.in என்னும் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்களுக்கு:-
இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததற்கான அடையாள நகல், கட்டணம் செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றுடன் சிடிஇடி மையத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும். இக்காலக் கெடுவிற்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












