மழை காரணமான கடந்த திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அத்தேர்வு டிசம்பர் 31ம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












