அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தொடங்குகின்றன.
நடைபெறும் இடம்:
எண். 6, கச்சாலீஸ்வரர் கோயில் லைன், அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை-600 001 என்ற முகவரியில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் உடல் நலன் மற்றும் மனநலம் குறித்த ஆலோசனையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 98847 47217, 93449 51475, 94446 41712 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.