அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இத்தேர்வு முடிவுகளை பின்வருமாறு காணலாம்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் உள்ளன.
இதனிடையே, கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. இருப்பினும், கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடந்தது. தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுகளின் தேர்வு தாள்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தப்பட்ட நிலையில் இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய இரண்டு இணையதளங்களில் வாயிலாக தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.