அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் மருத்துவக்கல்லூாி, மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிபதற்கான நுழைவுத்தேர்வு 2019ம் ஆண்டு மே மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (நவம்பர் 15) தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவானது முதல் நிலை மற்றும் இறுதி நிலை என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
முதல் நிலை விண்ணப்பப் பதிவு
முதல் நிலை விண்ணப்ப பதிவு இன்று (நவம்பர் 15) தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் தகவல்கள் 2019 ஜனவரி 3ம் தேதியன்று வெளியிடப்படும். விண்ணப்பப் பதிவின் இறுதிநிலை விவரங்கள் 2019 ஜனவரி 4-ம் தேதி அறிவிக்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு மே 14 ஆம் தேதி வெளியாகும். தேர்வின் முடிவு ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படும்.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரத்திலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு செம்டம்பர் 4-ஆம் வாரத்திலும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












