கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

சென்னையில் உள்ள முக்கியமான மகளிர் கலைக் கல்லூரிகளில் ஒன்றாதக் திகழ்கிறது எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி (M.O.P. Vaishnav College for Women). இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புப் பெற்றுள்ளது ஆகும். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளையும், நிபுணர்களையும் உருவாக்கி சாதனை படைத்து வருகிறது எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி. 32 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு ஏராளமான மகளிர் நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும், விளையாட்டு வீராங்கனைகளையும் உருவாக்கி வருகிறது எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி. கல்வித் தரத்தில் இந்தக் கல்லூரி எப்போதும் சமரசம் செய்துகொண்டதில்லை.

ஸ்ரீ வல்லபச்சார்யா வித்யா சபாவானது திவான் பகதூர் எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 1992-ல் எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது. எம்.ஓ.பி. அறக்கட்டளைகள் கல்லூரி வளாகத்திற்காக நிலத்தை திவான் பகதூர் எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார் தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாக அளித்தன.
தற்போது எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிர்வாகத்தை சிறீ வல்லபாச்சார்யா வித்யா சபா மேற்கொள்கிறது.

2002-ஆம் ஆண்டில், இக்கல்லூரி தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (என்ஏஏசி) நான்கு நட்சத்திரங்களுடன் அங்கீகாரம் பெற்றது. அதே ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் நிரந்தர இணைப்பு வழங்கப்பட்டது. இது 2004-ல் யுஜிசி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தால் சுயாட்சி (அட்டானமஸ்) வழங்கப்பட்டது.

கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

தற்போது இந்த கல்லூரியில் 15 இளங்கலை மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் உள்ளன. மேலும் முனைவர் பட்ட பாடத்திட்டங்களையும் கொண்டுள்ளது.

எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு:

இளங்கலை பிரிவில், ஊடகவியல், இளங்கலை இதழியல், இளம் அறிவியல் காட்சி தொடர்பியல், இளம் அறிவியல் மின்னணு ஊடகம், தகவல் தொழில்நுட்பத் துறை,
இளம் அறிவியல் கணினி அறிவியல், இளம் கணினி பயன்பாடு, இளம் அறிவியல் கணினி பயன்பாட்டுடன் கணிதம், வணிகத் துறை, பிபிஏ (இரு வேலை நேரங்கள்)
பி.காம். (தகவல் அமைப்பு மேலாண்மை), பி.காம். (கணக்கியல் மற்றும் நிதி) (இரு வேலை நேரங்கள்), பி.காம். (சந்தைப்படுத்தல் மேலாண்மை) (இரண்டாம் வேலை நேரம்), பி.காம். (பெருவணிக செயலாளர்) (இரண்டாம் வேலை நேரம்), பி.காம். (ஹானர்ஸ்), பி.ஏ பொருளாதாரம் (இரண்டாம் வேலை நேரம்), உணவு அறிவியல் துறை
பி.எஸ்சி உணவு அறிவியல் மற்றும் மேலாண்மை, சமூக அறிவியல் துறை, பி.ஏ. சமூகவியல், பி.எஸ்சி உளவியல், முதுகலைபிரிவில் ஊடகவியல், எம்.ஏ. தகவல் தொடர்பு, எம்.ஏ. ஊடக மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை, எம்.எஸ்சி (ஐடி)
வணிகவியல் துறை, எம்பிஏ பிரிவில் எம். காம், எம்.ஏ. மனித வள மேலாண்மை,
உணவு அறிவியல் துறை, எம்.எஸ்சி உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி தங்களது மாணவிகளுக்கு பாடத்திட்டத்தைத் தாண்டிய பல்வேறு வசதிகளை வழங்குகிறது. கல்லூரியில் பல சங்கங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், கலாச்சார நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் பத்திரிகை வெளியீடுகள் செயல்பாடுகள் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

கலாச்சார செயல்பாடுகள்

எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியானது மாணவிகளின் போட்டி உணர்வை வெளிப்படுத்தும் வருடாந்திர கலாச்சார கொண்டாட்டங்களை நடத்துகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக உள்ளது.

எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி (தன்னாட்சி) என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கல்லூரியின் செயலராக மனோஜ் குமார் சொந்தாலியாவும், தற்போதைய முதல்வராக டாக்டர் அர்ச்சனா பிரசாத்தும் உள்ளார்.

கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

மேலும், கல்லூரி மாணவர்களின் வழிகாட்டுதலுடன் அவர்களின் துறை ஆசிரியர்களின் தொடர் இதழ்களையும் வெளியிடுகிறது. இதுதவிர விளையாட்டுப் பிரிவில் ஏராளமான சர்வதேச வீராங்கனைகளை எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி உருவாக்கியுள்ளது. கல்லூரி விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு ஒரு தளத்தை எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி வழங்குகிறது. 52 சர்வதேச வீராங்கனைகள் கல்லூரியால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளனர். கூடைப்பந்து, கைப்பந்து, செஸ், ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் கல்லூரியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. மேலும், இக்கல்லூரி மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கி வருகிறது. கல்லூரியின் முதல்வராக உள்ள டாக்டர் அர்ச்சனா பிரசாத்தும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநராக டாக்டர் ஏ. அமுதாவும் தரம்வாய்ந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்குவதற்காக அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

கல்லூரியில் தேசிய கேடட் கார்ப்ஸ் பிரிவு (என்சிசி) உள்ளது, இது ராணுவத்தில் 52 கேடட்களையும் 5 விமான கேடட்களையும் உருவாக்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் குடியரசு தின முகாம் (RDC) மற்றும் தால் சைனிக் முகாம் (TSC) ஆகியவற்றில் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

எம்.ஓ.பி. வைஷ்ணவ் பெண்களுக்கான கல்லூரி மாணவர்களின் போட்டி மனப்பான்மையை வெளிக்கொண்டு வரும் வருடாந்திர கலாச்சார விழாக்களை நடத்துகிறது. மாணவிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எளிதாக்கும் முயற்சிகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் அபிலாஷா என்பது புதியவர்களுக்காக நடத்தப்படும் மூன்று நாள் சாரணர் முகாமாகும். முதலாம் ஆண்டு மாணவிகளின் மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டறிவதோடு, புதிய மாணவிகளை உடனடியாக கல்லூரியுடன் ஒன்றவைக்கும் செயலாக இது அமைந்துள்ளது.

இந்தியா டுடே - நீல்சன் சர்வே நடத்திய சென்னையின் சிறந்த 10 கலைக் கல்லூரிகள் பட்டியலில் எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியும் இடம்பெற்றது.

Rank College Name
1     லயோலா கல்லூரி

2     சென்னை கிறிஸ்தவக் கல்லூரி

3     ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி

4     மாநிலக் கல்லூரி

5     எத்திராஜ் மகளிர் கல்லூரி

6     மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி

7     எம்ஓபி மகளிர் வைஷ்ணவ் கல்லூரி

8     டிஜி வைஷ்ணவ் கல்லூரி

9     விவேகானந்தா கல்லூரி

10    ராணி மேரி கல்லூரி

யுஜி படிப்புகள்:

எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியின் யுஜி (UG) படிப்புகளில் சேர, விண்ணப்பதாரர்கள் கடைசியாக தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் செய்யப்படுகிறது
மேலும், தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் MBA திட்டத்தில் மாணவிகளின் சேர்க்கை நடைபெறுகிறது.
முதுகலை படிப்பு நிலையில், எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரி மாணவர்களுக்கு கலை, அறிவியல், வணிகம் போன்ற துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. கல்லூரியால் வழங்கப்படும் படிப்புகள் முதுகலை (MA), முதுகலை வணிகம் (M.Com) மற்றும் முதுகலை அறிவியல் (M.Sc). ஒவ்வொரு நிபுணத்துவத்திற்கும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை கல்லூரியால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலம் செய்யப்படுகிறது. கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும், முதுகலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.

கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

எம்பிஏ படிப்பு

மற்ற முதுகலை படிப்புகளுடன், MOP வைஷ்ணவ் கல்லூரி வணிக நிர்வாகத் துறையில் மற்றொரு முதுகலை படிப்பான எம்பிஏ வழங்குகிறது. எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியால் வழங்கப்படும் எம்பிஏ படிப்பு பொதுவாக மூன்று ஆண்டுகள் ஆகும்.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் எம்பிஏ படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எனப்படும் சேர்க்கை தேர்வை நடத்துகிறது.
கல்லூரியில் எம்பிஏ திட்டத்தில் சேர்க்கை விண்ணப்பதாரர்கள் TANCET இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு பிரிவு

எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் உள்ள வேலை வாய்ப்புப் பிரிவு (பிளேஸ்மெண்ட் செல்) வளாக வேலை வாய்ப்புகளை மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் தொழில்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலைவாய்ப்புகளை மாணவிகள் பெறுவதற்கு எளிதாக்குகிறது. தொழில்துறையின் தேவைக்கேற்ப சிறந்த திறமைசாலிகள் இங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். நாடு முழுவதிலும் உள்ள நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகளை திரட்டுவதில் எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியின் வேலை வாய்ப்பு பிரிவு முக்கிய பங்காற்றுகிறது.

பெரிய அளவிலான நிறுவனங்களும் எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி மாணவிகளை திறமைகளை ஆண்டுதோறும் கண்டறிந்து பயிற்சியாளர்களாகவும் பணியாளர்களாகவும் சேர்த்து வருகின்றன. வேலை வாய்ப்பு பிரிவு ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும். வேலை வாய்ப்புக் குழுவானது வேலை வாய்ப்பு அலுவலர், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது, அவர்கள் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு இயக்கங்களை நடத்துவதற்கு இணைந்து பணியாற்றுகின்றனர்.

கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

வேலை வாய்ப்பு நோக்குநிலை

கல்லூரி மூலம் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்த மாணவர்களின் ஒப்புதலுடன் வேலை வாய்ப்புக்கான செயல்முறை தொடங்குகிறது. கல்லூரிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு வேலைக்கான தேவையும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து விவரங்களும் மாணவிகளுக்கு புதுப்பிக்கப்படுகிறது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், அந்தந்த நிறுவனத்தின் முகாம்களில் கலந்துகொள்ளலாம்.

ஆஃபர் லெட்டர் ரோல் அவுட்டுக்கான ஆட்கள் சேர்க்கையின் முடிவு முதல் இறுதி வரை வேலை வாய்ப்பு பிரிவினரால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

பயிற்சி மாணவிகளின் திறன், பகுத்தறிவு மற்றும் தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்கான முன் வேலை வாய்ப்பு பயிற்சிகள் மற்றும் பட்டறைகள் இறுதியாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படுகின்றன. மாணவிகள் நம்பிக்கையைப் பெறுவதற்கு மாதிரி குழு விவாதம் மற்றும் நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சிகள் தேர்வர்களின் திறனை வளர்ப்பதிலும், தொழில்-கல்வி இடைவெளியைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. பயிற்சிகள் தொழில்நுட்ப உதவி மற்றும் பொதுவான வகுப்பறை அமர்வுகள். மாணவிகளின் கனவு வேலைகளில் சேரும் வரை, அவர்களைச் செயல்படுத்துவதையும், கைப்பிடிப்பதையும் எம்.ஓ.பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியின் வேலைவாய்ப்புப் பிரிவு (பிளேஸ்மென்ட் செல்) உறுதி செய்கிறது.

கல்லூரி தொடர்பான தகவல்களுக்கு கீழ்கண்ட முகவரியைத் தொடர்புகொள்ளலாம்:

முகவரி: M.O.P. VAISHNAV COLLEGE FOR WOMEN (AUTONOMOUS), 20, IV Lane, Nungambakkam High Road, Chennai - 600 034, Tamil Nadu, India.
தொலைபேசி: 044)2833 0262, 2833 0507
இ-மெயில் முகவரி: [email protected]
இணையதள முகவரி: www.mopvc.edu.in

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
M.O.P. Vaishnav College for Women (Autonomous) is an arts and science college located in Chennai, Tamil Nadu in southern India. It is affiliated with the University of Madras. The current principal is Dr. Archna Prasad. According to the survey on the Best Commerce Colleges All Over India by THE WEEK in association with Hansa Research, M.O.P Vaishnav College is in the 36th position. The college is re accredited by NAAC with a 3.56 GPA on a 4-point scale and an 'A++' grade. Its located at Nungambakam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+