சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள மிகவும் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சுருக்கமாக இது எம்சிசி என்று தாம்பரஸ் கிறிஸ்தவக் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது. 1837-ம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்றான பெருமையைக் கொண்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. 2012-ல் 175-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய இந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி விரைவில் 200-வது (2037-ல்)ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடவுள்ளது.
ஏராளமான தமிழறிஞர்கள், ஆங்கில அறிஞர்கள், துணைவேந்தர்கள், நடிகர், நடிகைகள், அறிவியலாளர்கள், கல்வியாளர்களை உருவாக்கிய பெருமை இந்தக் கல்லூரியைச் சேரும்.
இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றக் கல்லூரியாக அமைந்துள்ளது. பிரபல இதழான இந்தியா டுடே இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இயங்கி வரும் இந்த மாணவர் விடுதிகளை "இல்லம்" என்று இங்குள்ளவர்கள் அழைப்பர். சேலையூர் இல்லம், புனித தோமையார் இல்லம், பிஷப் ஹீபர் இல்லம், மார்ட்டின் இல்லம், மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித் தனியாக அருமையான முறையில் இயங்கி வருகின்றன.

எம்சிசி (MCC) ஆனது 1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேவாலயத்தின் இரண்டு மதகுருமார்களான ரெவரன்ட் ஜார்ஜ் ஜேம்ஸ் லாரி (Rev. George James Laurie) மற்றும் ரெவரன்ட் மேத்யூ போவி (Rev. Matthew Bowie) ஆகியோர் . சென்னை எழும்பூரில் உள்ள ரேண்டல்ஸ் (Randalls) சாலையில் செயின்ட் ஆண்ட்ரூ பள்ளியை நிறுவினர். 1835 ம் ஆண்டு நிறுவப்பட்ட சிறுவர்களுக்கான ஒரு சிறிய பள்ளிதான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் வேராக அமைந்துள்ளது . அவர்களின் வேண்டுகோளின் பேரில், ஸ்காட்லாந்து தேவாலயம் இந்தியாவுக்கு ஒரு குழுவை (மிஷனரி) அனுப்பியது. இந்த மிஷனரி ரெவ். ஜான் ஆண்டர்சன், இந்த நிறுவனத்தை ஜெனரல் அசெம்பிளி பள்ளியாக அமைத்து, சென்னை ஜார்ஜ்டவுனில் ஆர்மேனியன் தெருவின் (அரண்மனைக்காரன் தெரு) கிழக்குப் பகுதியில் வாடகை வீட்டில் சிறுவர்களுக்கான வகுப்புகளை நடத்தி வந்தார்.
செயின்ட் ஆண்ட்ரூ பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் 59 சிறுவர்கள் இந்த நிறுவனத்துக்குச் சென்றனர். மேலும், இந்தப் பள்ளி சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்தின் உச்ச நிர்வாகக் குழுவின் பெயரால் பெயரிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்து உயர் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1837-ல் கல்வியாளர் டாக்டர் வில்லியம் மில்லர் தலைமையில் 275 ஏக்கர் (1.11 சதுர கிலோமீட்டர் ) மரங்கள் நிறைந்த வளாகமாக பள்ளியிலிருந்து கல்லூரி உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரியில் தங்கும் விடுதிகள் மற்றும் பல கல்வி மற்றும் கலாச்சார சங்கங்களை உருவாக்கினார் டாக்டர் வில்லியம் மில்லர். இதன் மூலம் புகழ்பெற்ற எம்சிசி கல்லூரி இருவாக்கப்பட்டது. இந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியை தெற்காசியாவின் முதன்மையான கல்வி நிறுவனமாக வடிவமைத்தது டாக்டர் வில்லியம் மில்லர் முயற்சியால்தான்.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட இடத்தில் இடம் போதாததால் கல்லூரியை அதிக அளவு பரப்பளவு கொண்ட பகுதிக்கு மாற்ற வேண்டிய அவசியம் உண்டானது. அதன்படி, ரெவ். வில்லியம் ஸ்கின்னர் (முதல்வர் 1909-1921) தலைமையில் கல்லூரி 1919-ல் தாம்பரம் வளாகத்துக்கு கல்லூரியை மாற்றும் திட்டத்தைத் தொடங்கியது. ரெவ். கார்டன் மேத்யூ என்பவர், இதுதொடர்பாக அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்காக 390 ஏக்கர் (1.6 சதுர கிமீ) ஒதுக்கப்பட்டது. தாம்பரத்தில் உள்ள முன்னாள் சேலையூர் வன நிலப்பகுதியானது கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டது.
இதன்பின்னர் இங்கு கல்லூரிக்காக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் எட்வர்ட் பார்ன்ஸ் கல்லூரி வளாகத்தில் பல்வேறு அரிய மரக்கன்றுகளை மிக நுணுக்கமாக நட்டு அருமையான பகுதியாக மாற்றினார். அப்போது இந்தியாவின் கொடைக்கானலில் இருந்த சுவிஸ் கட்டிடக் கலைஞர் ஹென்றி ஷாட்டி கல்லூரிக்கான கட்டிடங்களை வடிவமைத்தார். நகரின் மையத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரி 1937-ல் சென்னையின் புறநகரில் உள்ள தாம்பரத்தில் பரந்த, பசுமையான வளாகத்துக்கு மாற்றப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1937-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சென்னையின் கவர்னர் ஜான் எர்ஸ்கின் பிரபு முதல் வளாக கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த வளாகமானது சேலையூர், தாமஸ் மற்றும் ஹீபர் ஆகிய மூன்று தங்குமிடங்கள் அமைக்க வழஇகோலியது.
1939 ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் வழக்கமான அடிப்படையில் மாணவிகள் கல்லூரிச் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர், மேலும் மாணவிகளுக்கான விடுதி 1950 ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்டது.
1968ஆம் ஆண்டில் ஆக்னஸ் மார்ட்டின் பெயரிடப்பட்ட மார்ட்டின் ஹால் என்ற பெண்களுக்கான வளாகத்தில் தங்கும் விடுதியாக உருவானது. 2009 இல் மார்கரெட் ஹால் மற்றும் 2016 இல் பார்ன்ஸ் ஹால் உருவாக்கப்பட்டது.
வில்லியம் மில்லர் என்பவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியை மாற்றியமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். இதையடுத்து 1938 ஆம் ஆண்டில், தாம்பரம் மாநாட்டை சென்னை கிறிஸ்தவக் கல்லூரி நடத்தியது. இது மெட்ராஸ் மாநாடு அல்லது தாம்பரம் 1938 என்றும் அழைக்கப்படுகிறது.
1978 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற இந்தியாவின் முதல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது, மேலும் தன்னாட்சி பெற்ற பிறகு பட்டதாரிகளின் முதல் தொகுதி 1981-ல் தேர்ச்சி பெற்றது. 2006 ஆம் ஆண்டு மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரிக்கு தன்னாட்சியின் வெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 175-வது ஆண்டு விழா 2012ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2037-ல் கல்லூரியானது 200-வது ஆண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடவுள்ளது.
கல்லூரியில் தற்போது கலை, அறிவியல் பிரிவில் இளநிலை, முதுநிலை வகுப்புகள், பிஎச்.டி. வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சமூக பணி (MSW) மற்றும் கணினி பயன்பாடுகளில் (MCA) முதுகலை படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 8500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பகல், மாலை நேரக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பகல் மற்றும் மாலை நேரங்கள் உட்பட 38 துறைகள் உள்ளன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி நிறுவனத்தில் சுமார் 294 பேராசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக பல முன்னேறிய தலைவர்கள் உள்ளனர். கல்லூரியில் படித்து குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, மாநில ஆளுநர், கல்வியாளர்கள் என பலர் உருவாகி சாதனை படைத்துள்ளனர்.
முன்னாள் மாணவர்களாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் , இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர், எம்.எம்.ராஜேந்திரன் , ஒடிசா ஆளுநர் 1999-2004, TRA Thumboo Chetty மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி, மைசூர் திவான், RK சண்முகம் செட்டி , சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர், ஜான் மத்தாய் , இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர், TT கிருஷ்ணமாச்சாரி , இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர், TN சேஷன் , முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்,
RVS பெரி சாஸ்திரி , இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், கிஷோர் சந்திர தியோ , இந்தியாவின் முன்னாள் பழங்குடியினர் விவகாரங்கள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், R. வேலு , முன்னாள் இந்திய ரயில்வே துறை அமைச்சர், எம்.தம்பி துரை , மக்களவை துணை சபாநாயகர், இந்திய முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் மேற்பரப்பு போக்குவரத்து துறை அமைச்சர், கிருஷ்ணசாமி சுந்தர்ஜி , முன்னாள் ராணுவத் தளபதி (1986-88), போகராஜு பட்டாபி சீதாராமையா , மத்திய பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர், ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் ஆந்திரா வங்கியின் நிறுவனர், நெட்டூர் பி.தாமோதரன் , டெல்லிச்சேரி முதல் மக்களவை உறுப்பினர், பிரகாஷ் காரத் , முன்னாள் பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),

P. சுப்பராயன் , முன்னாள் மெட்ராஸ் பிரசிடென்சியின் 4வது முதல்வர், பி. முனுசாமி நாயுடு , முன்னாள் மெட்ராஸ் பிரசிடென்சியின் 5வது முதல்வர், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு (ராவ் பகதூர்), முன்னாள் மெட்ராஸ் பிரசிடென்சியின் 10வது முதல்வர், முகமது உஸ்மான் (கான் பகதூர் சர்), முன்னாள் மெட்ராஸ் பிரசிடென்சியின் உள்துறை அமைச்சர், பிபி உம்மர் கோயா , கேரளாவின் இரண்டாவது கல்வி அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியவாதி, ஆற்காடு ராமசாமி முதலியார் (திவான் பகதூர்), ஐக்கிய
டுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முதல் தலைவர், KPS மேனன் , சுதந்திர இந்தியாவின் முதல் வெளியுறவு செயலாளர், சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்கான முன்னாள் தூதர், ஏ.பி.வெங்கடேஸ்வரன் , இந்தியாவின் 14வது வெளியுறவுச் செயலர், பிஜிக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர், சிரியா மற்றும் சீனாவுக்கான முன்னாள் தூதர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியப் பிரதிநிதி,
கே. ரகுநாத் , இந்தியாவின் 20வது வெளியுறவுச் செயலர், பங்களாதேஷுக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர், ரஷ்யா, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான முன்னாள் தூதர்,
சர்தார் கே.எம். பணிக்கர் , மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர், சீனா மற்றும் பிரான்சுக்கான முன்னாள் தூதர் மற்றும் எகிப்துக்கான தூதர், கே.விஜய் குமார் , இந்தியக் காவல்துறையின் முன்னாள் அதிகாரி (IPS), ஆபரேஷன் கூகூன் (2004) போது வீரப்பனைப் பிடித்த ஆகியோர் அமைந்து சிறப்பான இடத்தைப் பிடித்து சமூகத்துக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அரசியலில் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், சி.ராஜேந்திரன் , நாடாளுமன்ற உறுப்பினர் (சென்னை தெற்குத் தொகுதி), டி.கே.எம்.சின்னய்யா , முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு, முஹம்மது இஸ்மாயில் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி, ரூத் கட்டுமுரி , காமன்வெல்த் செயலகம், பொருளாதாரம், இளைஞர்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மூத்த இயக்குனர், பெண்பா செரிங் , நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசின் தலைவர், சுதந்திர இயக்கத் தலைவர்களாக எஸ். சத்தியமூர்த்தி , சுதந்திர ஆர்வலர், அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர், கே.பி.கேசவ மேனன் , சுதந்திர ஆர்வலர்,
வழக்கறிஞர் மற்றும் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தின் உறுப்பினர், ஈ. இக்கண்ட வாரியர் , சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கொச்சி சமஸ்தானத்தின் கடைசி பிரதமர், கே.கேளப்பன் , சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் மற்றும் நாயர் சேவை சங்கத்தின் நிறுவனர், எம்.சி.ராஜா , தலித் அரசியல்வாதி மற்றும் டாக்டர் . பி.ஆர். அம்பேத்கரின் சமகாலத்தவர், கொண்டா வெங்கடப்பையா, சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர் மற்றும் கிருஷ்ணா பத்ரிகா நிறுவனர், சட்ட வல்லுநர்களாக ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர் , இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர், இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு உறுப்பினர், முன்னாள் மெட்ராஸ் மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் (1929-44), பி.வி.ராஜமன்னார் , சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதி, முன்னாள் சென்னை மாகாண ஆளுநர் (1957-58),
வி.பாலகிருஷ்ண எரடி , முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, என். சந்தோஷ் ஹெக்டே , இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, முஹம்மது ஷஹாபுதீன் , முன்னாள் கிழக்கு வங்காள ஆளுநர், டாக்கா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை தீர்ப்பாயத்தில் (1949-50) பணியாற்றினார். கே.கே.வேணுகோபால், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆகியோர் தங்களது துறைகளில் ஜொலித்தனர்.
இந்திரா நூயி , தலைவர் மற்றும் CEO, பெப்சிகோ, சந்திரிகா டாண்டன், KM மம்மன் மாப்பிள்ளை , நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர், MRF Ltd, பிரதாப் சி. ரெட்டி , அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர், கோபால் விட்டல் , MD & CEO, பார்தி ஏர்டெல், ராஜா ராமண்ணா , இந்திய இயற்பியலாளர், இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் இயக்குனர், பத்மஸ்ரீ (1968), பத்ம பூஷன் (1973) மற்றும் பத்ம விபூஷன் (1976) ஆகிய விருதுகளை பெற்றவர், கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் , ராயல் சொசைட்டியின் சக, ராமன் சிதறலைக்
கண்டுபிடித்தார், பத்ம பூஷன் (1954) மற்றும் பட்நாகர் விருது (1958) ஆகியவற்றை வழங்கினார், ஜார்ஜ் சுதர்ஷன் , தத்துவார்த்த இயற்பியலாளர், பத்ம பூஷன் (1976) மற்றும் பத்ம விபூஷன் (2007) விருதுகளை பெற்றவர், ரவி அரவிந்த் பாலட் , அரசியல் பொருளாதார நிபுணர் & வரலாற்று சமூகவியலாளர், பிங்காம்டன், பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியர் (துறைத் தலைவர்), PT நரசிம்மன் , தத்துவார்த்த வேதியியலாளர், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்றவர், டிஎன் அனந்தகிருஷ்ணன் , பூச்சியியல் நிபுணர், இயக்குனர், இந்திய விலங்கியல் ஆய்வு, டி.வி.ராமகிருஷ்ண ஐயர் , வேளாண்
பூச்சியியல் நிபுணர், முத்துசாமி லட்சுமணன் , தத்துவார்த்த இயற்பியலாளர், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்றவர், புன்யான் எட்மண்ட் விஜயம் , புவியியலாளர், உஸ்மானியா பல்கலைக்கழகம், என். கௌதம் , டிஎன்ஏ கிரிஸ்டலோகிராஃபர் மற்றும் உயிர் தகவலியல் நிபுணர், மெட்ராஸ், பல்கலைக்கழகத்தின் படிகவியல் மற்றும் உயிர் இயற்பியலில் அட்வான்ஸ் ஸ்டடி மையத்தில் எமரிட்டஸ் பேராசிரியர், ஜான் குரியன் , உயிர் வேதியியலாளர். ஜூனியாட்டா கல்லூரிக்கு மாற்றுவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் படித்தார், சி.லிவிங்ஸ்டோன் , இந்திய விஞ்ஞானி,
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி , வரலாற்றாசிரியர், சர்தார் கே.எம்.பணிக்கர் , அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் வரலாற்றாசிரியர், எம்ஜிஎஸ் நாராயணன் , வரலாற்றாசிரியர், கல்வியாளர் மற்றும் அரசியல் விமர்சகர்,
சி. மீனாக்ஷி , வரலாற்றாசிரியர், கேஎன் ராஜ் , பொருளாதார நிபுணர், மால்கம் ஆதிசேஷியா , வளர்ச்சிப் பொருளாதார நிபுணர், ராஜா செல்லையா, பொருளாதார நிபுணர், CT குரியன், பொருளாதார நிபுணர்,
புலப்ரே பாலகிருஷ்ணன், பொருளாதார நிபுணர், சி.எஸ்.லட்சுமி (அம்பை), பெண்ணிய எழுத்தாளர் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர், எஸ். தியோடர் பாஸ்கரன், திரைப்பட வரலாற்றாசிரியர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர், ஸ்ரீகுமார் வர்மா , எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர், நந்தூரி வெங்கட சுப்பா ராவ் , கவிஞர், ஸ்ரீரங்கம் சீனிவாச ராவ் , கவிஞர் மற்றும் பாடலாசிரியர், வேதம் வெங்கடராய சாஸ்திரி , கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர், கே ஏ ஜெயசீலன் ஆகியோர் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் பெருமையை உலகுக்கு பறைசாற்றினர்.
மொழியியலாளர் மற்றும் கவிஞர் பிரிவில் மேனன் மராத் , நாவலாசிரியர், டேவிட் டேவிடார் , நாவலாசிரியர் மற்றும் வெளியீட்டாளர், SR ரங்கநாதன் , இந்தியாவில் நூலக அறிவியல், தகவல் அறிவியல் மற்றும் ஆவணப்படுத்தலின் தந்தை, சித்தமுரு ராமையா , இறையியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
ஏ. லட்சுமணசாமி முதலியார் , சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மத்தேலா ஏபெல் , ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகம், சோனாஜாரியா மின்ஸ் , சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மோலி ஈசோ ஸ்மித் , மன்ஹாட்டன்வில்லே கல்லூரியின் தலைவர் , நியூயார்க்,
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தர் சீராம் கோவிந்தராஜுலு நாயுடு, கேஎம் மேத்யூ , தலைமை ஆசிரியர், மலையாள மனோரமா, சஷி குமார் , நிறுவனர், ஏசியாநெட், ஜெமினி கணேசன் , சினிமா நடிகர், நாசர் , சினிமா நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், ஜான் சங்கரமங்கலம் , திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் FTII இன் முன்னாள் இயக்குனர், புனே, ராம் , திரைப்பட இயக்குனர், ஏ.எல்.விஜய் , திரைப்பட இயக்குனர், பிரதாப் போத்தன் , சினிமா நடிகர் மற்றும் இயக்குனர், ரோஷன் மேத்யூ , நடிகர், நரேன் வெயிஸ் , நடிகர் மற்றும் மாடல்,
ஹேண்டல் மானுவல் , இசைக்கலைஞர், பென்னி தயாள் , பின்னணி பாடகர், அரவிந்த் வேணுகோபால் , பின்னணி பாடகர், சாமுவேல் ஜோசப் (ஷ்யாம்) , இசையமைப்பாளர், மெர்வின் சாலமன் , இசையமைப்பாளர்,
ரத்ன குமார் , திரைப்பட இயக்குனர், கே.டி.பால் - முன்னாள் தலைவர், ஒய்.எம்.சி.ஏ, பி.செஞ்சியா,
வெங்கல் சக்கரை, ஐயாதுரை ஜேசுதாசன் அப்பாசாமி, வெஸ்லி ஆரியராஜா வி.சி.சாமுவேல்,
வேதநாயகம் சாமுவேல் அசரியா, பேராயர் மார் இவானியோஸ் ஆகியோர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான கல்வியாளர்களையும், வல்லுநர்களையும், விஞ்ஞானிகளையும், திரைத்துறை வல்லுநர்களையும் உருவாக்கியுள்ள இந்தக் கல்லூரி 200-வது ஆண்டை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications












