போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மார்ச் 31ல் தொடக்கம்.!

சென்னையில் பெரியார் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் வரும் மார்ச் 31ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்

சென்னையில் பெரியார் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் வரும் மார்ச் 31ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மார்ச் 31ல் தொடக்கம்.!

இதுகுறித்து பெரியார் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மார்ச் 31-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கத்தில், போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.

இதில் பங்கேற்க விரும்புவோர் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Free Coaching For Competitive Exam In Chennai By Periyar IAS Academy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X