திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தோட்டக்கலை அறிவியலில் ஈராண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோட்டக்கலைத் துறையில் பட்டயப்படிப்பினை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் நடப்பு ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மகத்துவ மையத்திலும் ஆண்டுதோறும் ஒவ்வொரு மையத்திலும் 50 மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு தேர்வில் உயிரியல், தாவரவியல், விலங்கியியல், வேளாண்மை கோட்பாடு மற்றும் செயல்முறை, பயிர் உற்பத்தி கோட்பாடு மற்றும் செயல்முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
01.06.2018ம் நாளன்று பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 25 வயதிற்கு மேற்படாமலும், மற்ற பிரிவினர் 22 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற:-
தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்திலும் இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பங்கள் 31.10.2018 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மேற்கண்ட மையங்களில் விண்ணப்பப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31.10.2018 மாலை 5.45 மணிக்குள் தோட்டக்கலை துணை இயக்குநர், தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், கூட்டூர் கிராமம், நெல்லுமாறு சாலை, தளி - 635118, கிருஷ்ணகிரி
(அல்லது)
- தோட்டக்கலை துணை இயக்குநர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் - 624 004 என்ற முகவரிக்கு வந்தடையும் வகையில் அஞ்சல் செலுத்த வேண்டும்.
நவம்பர் முதல் வாரத்தில் அந்தந்த மையங்களில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இணையதளம் http://tnhorticulture.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.