சி.பி.ஐ., என்றழைக்கப்படும் மத்திய புலனாய்வு துறையில், காலியாக உள்ள 'Forensic Expert' பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆஃப்லைன் முறையில் இந்த காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, ஜூலை 26ம் தேதி கடைசி நாளாகும்.
நிர்வாகம் : மத்திய புலனாய்வு
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., எம்சிஏ.,(BE/B.Tech, M.Sc, MCA)

வயது வரம்பு
விண்ணப்பதார்கள், 01.08.2022 தேதியின்படி,வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வுக்கான விவரங்களை, சி.பி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து, அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு, ஜூலை 26 க்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக,விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம்
இந்தப் பதவிக்கு மாதம் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும். இப்பணியின் காலம், தொடக்கத்தில் ஓராண்டு வரை. தேர்வர்களின் செயல்திறன் மற்றும் சி.பி.ஐ.யின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில், ஒப்பந்த காலம் மேலும் நீட்டிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://cbi.gov.in/vacancy-list/MQ==
பணி தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்; Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Law ல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












