ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :-
சென்னை மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் இரண்டரை ஆண்டுக் கால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. 12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களை முதன்மையாகப் பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
இதற்கான விண்ணப்பத்தைச் சென்னையில் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளிலும், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை, நாகர்கோவில் அரசு ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளிலும் ரூ.350-கான வரவோலையைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் பெற : www.tnhealth.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேர்வுக் குழு அலுவலகம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, சென்னை - 106 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 26 மாலை 5 மணி மட்டுமே.