அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் வேளாண்மை பி.எஸ்சி, அறிவியல் தோட்டக்கலை, பட்டயப் படிப்பு வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை மருந்தாக்கியல் பட்டப்படிப்பு, இளநிலை அறிவியல் செவிலியர், இளநிலை இயற்பியல் சிகிச்சை, இளநிலை தொழில்முறை சிகிச்சை, இளநிலை மீன்வள அறிவியல் மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் 15-04-2019 முதல் 31-05-2019 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
இணையவழி பதிவுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தள முகவரியை தொடர்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்ணையும் (04144-238349) தொடர்புகொள்ளலாம். இதற்கான சிறப்பு சேவை மையம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.