தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சியில் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பதிவுகட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச்26,2018 ஆகும்.
இன்ஜினியரிங் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 9,300 - 34,800 மற்றும் கிரேடு பே தொகையாக ரூபாய் 5100 பெறலாம்.
பணியிட விவரங்கள்:
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் சிவில், நீர்வளத்துறை, பொதுத்துறையில் 70 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் சிவில் பில்டிங், பொதுத்துறை, 23 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் எலக்டிரிக்கல் இன்ஜினியர் பணியிடம் 42 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் ரூரல் டெவலப்மெண்ட் மற்றும் பஞ்சாயத்து துறை பணியிடம் 29 பணியிடங்கள்
கல்வித்தகுதி:
பிஇ பட்டப்படிப்பு முடித்திருக்கலாம் சிவில் மற்றும் ஸ்டரக்சரல் இன்ஜினியரிங் செக்ஸன் ஏ மற்றும் பி பிரிவிக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தந்த துறையில் இன்ஜினியரிங் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவார்கள்.
எழுத்து தேர்வு மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தாள் ஒன்றிற்கான தேர்வு நாள் மே 20, 2018 காலை 10.00 மணி முதல் மதியம் 1 வரை நடைபெறும்.
தாள் இரண்டாம் தாளுக்கான தேர்வு நாள் 20.5.2018 மதியம் 20.5.2018 முதல் மாலை4.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ் தளத்தில் நோட்டிபிகேசன் பகுதியினை கிளிக் செய்து தகவல்களை பெறலாம்.
அறிவிப்பு விவரம்:
நோட்டிபிகேசனில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பினை கொடுத்துள்ளோம் பின்ப்பற்றவும்.
அறிவிப்பு இணைப்பு:
அறிவிப்பு இணைப்பு குறித்த முழுவிவரங்களையும் படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பம்:
விண்ணப்பங்கள் குறித்து முழுமையாக படித்து பார்த்து பதிவு செய்யாதவர்கள் ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் மூலம் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் பதிவுசெய்தபின் விண்ணப்பிக்கவும்.