உத்தரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தில் (என்எப்எல்) காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 127
பணி: ஜூனியர் இன்ஜினியர் அஸிஸ்டென்ட் கிரேடு II
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: புரொடக்சன் - 60
பணி: மெக்கனிக்கல் - 37
பணி: எலெக்ட்ரிகல் - 12
பணி: இன்ஸ்ட்ருமென்டேஷன் - 18
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: பயர்மேன் - 02
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தீயணைப்பு வீரர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 முதல் 30க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.235. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கேரியர் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வங்கிகளில் 10,190 பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க ஜூலை 2 கடைசி!