இந்திய இரயில்வேயில் வடக்கு பகுதியில் வேலைவாய்ப்புக்கு விண்ணபிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் . நவம்பர் 30 ஆம் நாள் விண்ணப்பிக்க இறுதிநாள் ஆகும் .
இந்திய இரயில்வேயில் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி , எஸ்டி, பெண்கள் , மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய இரயில்வேயில் அப்பிரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க 15 முதல் 24 வரை வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின் பிரிவனருக்கேற்ப வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.
இந்திய இரயில்வேயில் வடக்கு பகுதியில் தேவைப்படும் அப்பிரண்டிஸ் பணியிடங்களாவன ஃபிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், எலக்ட்ரீசியன், கார்பெண்டர், மெசினிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் நிரப்பபடும் பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 2196 ஆகும்.
விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் விதிமுறைப்படி சம்பளம் பெறலாம் . இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறுவோர்கள் மெரிட்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்போர் அதிகாரபூர்வ அறிவிக்கையை படித்துபார்த்து முறையாக விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ் இணைப்பை கொடுத்துள்ளோம். அறிவிக்கை இணைய இணைப்பையும் இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பையும் இணைத்துள்ளோம்.
இந்திய இரயில்வேயில் முக்கியமான ஒன்றாக மத்திய இரயில்வே திகழ்கின்றது. மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பினை விட்டுவிடாதிர்கள் .
சார்ந்த பதிவுகள்:
யூபிஎஸ்சியில் பல்வேறு துறைகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
மத்திய அரசின் சுற்றுசூழலில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்
ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே !