பள்ளிகளில் டிஜிட்டல் திட்டம் கொண்டுவருவது அரசு திட்டமிட்டு வருகின்றது. மாணவர்கள் கல்வியில் அடுத்த நிலை அம்சங்களை கற்றுகொள்ளவும் ஆர்வம் பெருகவும், குறிப்பிட்ட பாடங்களில் தேவை கருதி மத்திய அரசு டிஜிட்டல் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் டிஜிட்டல் கருவிகளான புரெஜக்டர்கள் மற்றும் சாஃப்ட்வோர்கள் கொண்டு வரஅரசு நடவடிக்கையெடுக்க முன் வந்துள்ளது .
மாணவர்களின் தரத்தினை அதிகரிக்கவும் கல்வி வழங்கும் முறையை மாற்ற அரசு திட்டமிட்டு செயல்படுகின்றது.ஆகவே இதனை தொடர்ந்து பள்ளி கல்வியில் பல மாற்றங்களை அரசு புகுத்த திட்டமிட்டுள்ளது . அத்துடன் பள்ளிகளை சுமார்ட் கல்வி திட்டம் கொண்டு வர அரசு முழு முணைப்போடு உள்ளது .
வருங்காலங்களில் இன்னும் பல மாற்றங்களை புகுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தின் தூண்கள், அவர்களது வரும் காலத்தில் டிஜிட்டல் போட்டியை கையாளவே அரசு இத்தகைய திட்டங்களை கொண்டு செயல்படுத்த ஆயுத்தமாகுகின்றது. உலகிலேயே அதிக மனித ஆற்றல் கொண்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அது குறித்து அரசு பல மாற்றங்களை புகுத்தும் திட்டங்களை முன்வைக்கின்றது. மாணவர்களுக்கு தூய்மையின் அவசியம் தெரியவே தூய்மை குறித்து குறும்படம் தயாரிக்கும் போட்டியை நடத்தியது மத்திய அரசு. மேலும் இனிவரும் காலங்களில் தொலைநோக்கு திட்டத்தோடு அரசு செயல்பட பரிசீலித்து வருகின்றது .
சார்ந்த தகவல்கள் :
கல்விநிறுவனங்களில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்துவது குறித்து காவல்துறை அறிவுரை
தமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை
மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது