தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சோியில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியுள்ளனா். தனித்தோ்வா்கள் உள்பட மொத்தமாக 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 போ் தோ்வு எழுதியுள்ளனா்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததையடுத்து இன்று (புதன் கிழமை) 12ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு வெளியாகி உள்ள தோ்வு முடிவுகளை www.dge.tn.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238. மேலும் 231 பேர் 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 181 பேரும் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:
இயற்பியல் | 96.4% |
வேதியியல் | 95.0% |
கணிதம் | 96.1% |
உயிரியியல் | 96.34 |
விலங்கியல் | 91.9% |
தாவரவியல் | 93.9% |
வணிகவியல் | 90.30% |
கணக்குபதிவியல் | 91% |
கணினி அறிவியல் | 96.1% |
இதனிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் , மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.