தமிழ் பண்பாட்டு மையம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் இணைந்து குழந்தைகளின் சிந்தனை திறனை மேம்படுத்தும் விதமாக பனை ஓலையில் இருந்து பொம்மைகள் தயாரிக்கும் இலவச ஒரு நாள் பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளன.
திருப்பூரில், வரும் 24-06-2018 அன்று நடைபெற உள்ள முகாமில் 'பனை ஓலை பொம்மைகள் 2' என்ற தலைப்பில், குழந்தைகளுக்கு, பனை ஓலையில் இருந்து பொம்மைகள், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பனை ஓலையில் இருந்து கடிகாரம், மோதிரம், கண் கண்ணாடி, கை ஆட்டும் பொம்மை, மீன், ஒலி எழுப்பும் வண்டு, கிரீடம் உட்பட பல்வேறு பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி நடைபெறும் இடம்& தேதி :
அரிமா சங்கம்,
குமரன் சாலை,
திருப்பூர்.
தேதி: 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை.
முன்பதிவு அவசியம்: முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர், யோகி செந்தில், 9894736441