சென்னை சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By Kani

சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2018-2019 ஆம் ஆண்டிற்கான சட்ட கல்லூரி மாணவர்கள் சேர்க்கை மே28 முதல் தொடங்குகிறது. சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி.(ஹனர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி.(ஹனர்ஸ்), பி.காம். எல்.எல்.பி.(ஹனர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி.(ஹனர்ஸ்) ஆகிய 5 ஆண்டு படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மே28 முதல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைச் ஆன்லைன், அஞ்சல் வாயிலாக சமர்பிக்க கடைசி நாள் ஜூன் 18 ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இதேபோல், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்துச் சட்டக்கல்லூரிகளிலும் 5 வருட பி.ஏ.எல்.எல்.பி. படிக்க ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதி ஆகும்.

3 வருட எல்.எல்.பி சட்டப்படிப்புக்கு ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

பிரகாசமான எதிர்காலத்திற்கு சட்டப்படிப்பு!பிரகாசமான எதிர்காலத்திற்கு சட்டப்படிப்பு!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LAW Admission Notifications 2018 - 2019 (LLB, LLM, BA LLB, BBA LLB)
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X